↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காஸாவில் முதியவர் ஒருவர், தனது பேரக்குழந்தைகள் விளையாடுவதற்காக சிங்கக்குட்டிகளை வாங்கி கொடுத்துள்ளார்.
பாலஸ்தீன அரசு ஊழியரான சாத் அல்-ஜமால்(Sadd Al Jamal age -54) என்பவர் உள்ளூரில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து இரண்டு சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் உள்ள பேரக்குழந்தைகளுக்கு விளையாட கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போது இரண்டரை மாத குட்டிகளாக இருக்கும் இந்த சிங்கங்களிடம் இன்னும் சில நாட்களுக்கு மேல் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாது.
ஏனெனில் நான்கு மாதங்களாகிவிட்டால் இவை ஆபத்தானவை ஆகிவிடும். ஆறு மாதங்களாகி விட்டால் மிக, மிக ஆபத்தானவையாக மாறிவிடும். எனவே, இன்னும் ஒரு மாதத்தில் இந்த குட்டிகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top