↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார்.
தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த பின்னர் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தலையில் நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது பின் தலையில், மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இயந்திர உதவியுடனேயே அவர் சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயதான பிரியந்த சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top