↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய ரசிகர்கள் கதறி அழுதனர். இந்தியா தோல்வியைத் தழுவியதற்காக சிட்னி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்திய அணி இறுதிக்கு முன்னேறாததால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டனர்.

329 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வியை தழுவியது.

உலகக் கோப்பை அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது.

வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.


முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்ரிக்கா தோற்று வெளியேறிய போது வீரர்களே கதறி அழுதனர்.

ஆனால் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீரர்கள் யாருமே அழுதது போலத் தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள்தான் அழுது தீர்த்தனர். அது சரி... ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங்!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top