↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இம்முறை உலக கோப்பை எங்களுக்குதான் கிடைக்கும், அதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை அரையிறுதியில் நாளை, ஆக்லாந்தில் நடைபெற உள்ள முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் நடுவே இன்று, நிருபர்களுக்கு பேட்டியளித்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ்.
டி வில்லியர்ஸ் கூறியாதாவது: தென் ஆப்பிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலக கோப்பையில் நீக்கியுள்ளோம்.
தென் ஆப்பிரிக்க அணி தனது முழு பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.
உலக கோப்பை தொடர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு நடுவேயும், அதோடு மோதி, அதை ஏர்றுக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.
உலக கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாங்கள் முழுக்க ப்ரெஷ்ஷாக உள்ளோம். நாளைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.
நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தளவில், பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை. எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும். இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இதனிடையே காயத்தால் அவதிப்பட்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் குணமடைந்து, பயிற்சியில் ஈடுபட்டார்.
பிளாண்டரை அணியில் சேர்ப்பதற்காக காலிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து கைல் அப்பாட் கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறிதித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றார்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» "கப்"பு எங்களுக்குத்தான்... திருவிளையாடல் தருமி போலவே பேசும் டிவில்லியர்ஸ்!
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.