↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு  எதிரான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 237 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
இதன்மூலம் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார்.
இந்தப் போட்டியை அவரது காதல் மனைவி லாரா மெக்கோல்ட்ரிக் நேரில் கண்டுகளித்து உற்சாகப்படுத்தினார்.
கணவரின் அதிரடி ஆட்டம் குறித்து அவர் கூறுகையில்,
எனது பெற்றோருடன் அமர்ந்து குப்திலின் ஆட்டத்தை கண்டு ரசித்தேன். இது எங்கள் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு தருணம். ஆனால் இந்த சாதனையை நாங்கள் பெரிய அளவில் கொண்டாடப்போவதில்லை.
இது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனாலும் உலக கிண்ணத்தை வென்ற பிறகு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top