↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸின் தவறான அப்பீலைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை கிண்டல் செய்துள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களை குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 121 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக 39வது ஓவரில் ஜோ ரூட்டுக்கு சுரங்க லக்மல் பந்து வீசினார். அப்போது அந்த ஓவரின் 5வது பந்து ஜோ ரூட்டின் முன்னங்காலில் பட்டது. இதனையடுத்து எல்பிடபில்யூ அப்பீல் செய்யப்பட்டது.
களநடுவராக இருந்த புரூஸ் ஆக்சன்போர்ட் அது அவுட் இல்லை என அறிவித்தார். ஆனால் இதை ஒத்துக் கொள்ளாத இலங்கை அணியின் அணித்தலைவர் மேத்யூஸ் 3வது நடுவரிடம் முறையிட்டார்.
இதை 3வது நடுவர் சோதித்து பார்க்கையில் பந்து எங்கோ விலகிப் போவது நன்றாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து நாட்-அவுட் என அறிவித்தார். இதனால் இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில், `இந்த உலகக்கிண்ணத் தொடரில் இது மோசமான அப்பீலா?’ என்று பதிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top