↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் அப்டிரிக்கு இன்று 35 வது பிறந்தநாள் ஆகும்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே திணற ஆரம்பித்தது. இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி திக்குத் திணறி 7 விக்கெட்டுக்கு 235 ஓட்டங்களை எடுத்தது.
தனது பிறந்த நாள் தினத்தில் களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி, ஜிம்பாப்வே அணியை பிரித்து மேயப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் வில்லியம்ஸ் வீசிய பந்தில் டக்- அவுட் ஆக வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஏற்கனவே இரண்டு தோல்விகளால் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்களை இது மேலும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top