↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆந்திராவின் மெகா ஸ்டார் வரிசையில் மிக முக்கியமான இடத்திலிருக்கிறார் மகேஷ்பாபு. இங்கிருக்கும் ஹீரோக்களில் பலருக்கு அங்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதைப்போலவே மகேஷ்பாபுவுக்கும் தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம். இவருக்கு மட்டுமல்ல, ராம்சரண், பவன்கல்யாண் போன்ற ஹீரோக்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் முறையான இயக்குனருக்காக காத்திருக்கிறார்கள் அவர்கள்.
முதலில் மகேஷ்பாபுவை தமிழில் அறிமுகப்படுத்தப் போகிறார் ‘ஜில்லா’ பட இயக்குனர் ஆர்.டி.நேசன். அந்த படத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் என்று துருவ நட்சத்திரங்களை பிடித்து வந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த நேசன், மகேஷ்பாபுவுக்கு ஒரு கதையை சொல்லி அசத்தினாராம். இந்த கதையில் மீண்டும் மோகன்லால் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம். நேரடியாக மகேஷ்பாபுவை இங்கு இறக்கிவிட முடியாதில்லையா? சப்போர்ட்டுக்கு நம்ம ஊர் டாப் ஹீரோ ஒருவர் இருந்தால்தானே தேரை வடம் பிடித்து இழுத்துப்போக சரியாக இருக்கும்? அநேகமாக அந்த இன்னொரு ஹீரோ ஆர்யாவாக இருக்கக் கூடும் என்கிறார்கள். நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் பெரிய ஹிட் அடிக்காமல் காத்திருக்கும் பி.வி.பி க்கு இந்த காம்பினேஷன் மூலம் அந்த ஆசை நிறைவேறலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top