↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரபல கன்னடப் பட நடிகை மாலாஸ்ரீ என்பவருக்கு, ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று ஆசிட் வீச்சு மிரட்டல் விடுத்துள்ளது.
சென்னையில் பிறந்து, பெங்களூரில் கன்னட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மாலாஸ்ரீக்கு கர்நாடகம், மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்கள் உள்ளன.

அவற்றில் ஒரு சொத்தை சமீபத்தில் அவர் விற்பனை செய்த போது அவருக்கு சில பிரச்சினைகள் எழுந்துள்ள‌ன.
இதையடுத்து மாலாஸ்ரீயை தொலைப்பேசியில் மூன்று பேர் தொடர்பு கொண்டு, முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாக மிரட்டியுள்ளனர்.

தற்போது இதுகுறித்து பொலிசில் மாலாஸ்ரீ புகார் அளித்துள்ளதோடு, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்நிலையில், மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையைச் சேர்ந்த சில ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மற்றும் தரகர்கள் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top