↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் இலங்கை அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
உலகக்கிண்ணத் தொடரில் காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. அதனால் எதிரணியிடம் தோல்வி பெற்று தொடரை விட்டு வெளியேறிவிடும்.
இந்நிலையில் நாளை நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கையை சந்திக்கிறது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறுகையில், கடந்த கால தோல்விகளை (நாக்- அவுட் சுற்றில்) மறந்து விடவேண்டும். ஏனென்றால் அது முடிந்துபோனது. ‘லீக்’ ஆட்டங்களில் சிறப்பாகவே ஆடினோம்.
பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சு நன்றாக இருந்தது. துடுப்பாட்டத்தில் சொதப்பிவிட்டோம்.
காலிறுதியில் ஆட்டத்தில் முழு திறமையை வெளிபடுத்துவோம். அதில் தான் எங்களது முழு கவனமும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top