↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காயத்தில் இருந்து மீண்டு வந்து பட்டையை கிளப்பி வரும் மலிங்காவிற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு மலிங்காவின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மலிங்கா நீண்ட காலமாக அணியில் இடம்பெறவில்லை.
அதன் பிறகு உலகக்கிண்ண இலங்கை அணியில் இணைந்த மலிங்கா ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும், தற்போது எழுச்சி பெற ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் ஜெயவர்த்தனே கூறுகையில், மலிங்கா காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக பந்து வீசுகிறார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட மலிங்கா ஐந்து மாத இடைவெளிக்கு பின் உலககக்கிண்ண போட்டியின் போது அணிக்கு திரும்பினார்.
காயத்தில் இருந்து 100 சதவீதம் குணமடைந்து விட்டோம் என்று மலிங்கா மனதளவில் நம்பவேண்டும் என்பதே எங்களது யோசனையாக இருந்தது. அதன்படி அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கெதிராக அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தாலும், அதன்பின் சிறப்பாக பந்து வீசி 11 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
கடந்த நான்கு வாரமாக மலிங்கா அதிக அளவு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top