↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோலிவுட்டில் உள்ள ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் ஒருசில ஹீரோக்கள் இந்த வருடம் மூன்று படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன், தனுஷ், சிம்பு ஆகியோர்களுக்கு இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த பட்டியலில் அதர்வா முரளியும் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் இளம் நடிகரான அதர்வா முரளி, தற்போது கணிதன், ஈட்டி, சண்டிவீரன் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்று படங்களில் கணிதன்' முதலில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடல் மட்டுமே 'கணிதன்' படத்திற்காக படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை சந்தோஷ் என்பவர் இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.

மேலும் அதர்வா நடித்து வரும் ஈட்டி படத்தில் ஸ்ரீதிவ்யாவும், சண்டி வீரன் படத்தில் 'கயல்' ஆனந்தியும் நாயகிகளாக நடித்துள்ளனர். அதர்வா நடித்து இவ்வருடம் வெளிவரவுள்ள இந்த மூன்று படங்களும் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top