↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்ய முடியாமல் தவித்த தம்பி ஒருவர், தனது அண்ணனை கொலை செய்துள்ளார்.
சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (48) என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(30), செந்தில்( 31) ஆகியோரை பள்ளப்பட்டி பொலிசார் கைது செய்தனர்.

இவர்கள் கூறிய தகவலின் பேரில் உமாபதியை கொலை செய்த அவரது தம்பி மாரியப்பன் ( 36). அவரது நண்பரும், பிரபல ரவுடியுமான விஜய் ஆனந்த்( 35) ஆகியோரை பொலிசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று சேலம் பள்ளப்பட்டி பொலிஸ் நிலையம் வந்து கிராம நிர்வாக அதிகாரி முன் சரண் அடைந்தனர்.
இவர்களை பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் பொலிசார் கைது செய்தனர்.

கைதான மாரியப்பன் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு பள்ளப்பட்டியில் 3 ஆயிரம் சதுர அடியில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இந்த நிலத்தை விற்க கூடாது என எனது அண்ணன் உமாபதி தடுத்து வந்தார். பின்னர் அவர் நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்.
ரூ.3 கோடி சொத்து இருந்தும் இதை என்னால் அனுபவிக்க முடியவில்லை. எனக்கு பெண் பார்க்க சென்றால் சொத்து இல்லாதவருக்கு நாங்கள் எப்படி பெண் தருவது என கூறி பெண் தரவில்லை.

இதனால் வாழ்க்கை வெறுத்து இருந்த நான், திருமணம் ஆகாத வறுத்தத்தில் சதி திட்டம் தீட்டி எனது அண்ணனை கொன்றேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top