↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மேற்கு வங்காளத்தில் வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த வடக்கு தினஜ்பூர் மாவட்ட பெண் மாஜிஸ்திரேட்டுக்கு நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது கைப்பேசி எண்ணை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் இஸ்லாம்பூர் பகுதியை சேர்ந்த அப்துல் காலேக் (45) என்பது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்த பொலிசார் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி, தற்போது 14 நாள் காவலில் அடைத்துள்ள‌னர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top