↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வரும் பொங்கலுக்கு வெளிவரும் 'ஐ' திரைப்படம் தன்னுடைய இரண்டாவது படம் என்று கூறியுள்ளார். இதுவரை 'ஐ' படத்துடன் சேர்த்து இதுவரை 12 படங்கள் இயக்கியுள்ள ஷங்கர் இந்த படத்தை தனது இரண்டாவது படம் என்று கூற என்ன காரணம் என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.

ஜெண்டில்மேன் முதல் சிவாஜி வரை தன்னுடைய திரையுலகம் பர்ஸ்ட் இன்னிங்ஸ் என்றும், எந்திரன் படத்தில் இருந்து தன்னுடைய பாணி முற்றிலும் மாறியுள்ளதால் தற்போது நடந்து வருவது இரண்டாவது இன்னிங்ஸ் என்று கூறிய ஷங்கர், இரண்டாவது இன்னிங்ஸில் 'ஐ' தனது இரண்டாவது படம் என்று கூறியுள்ளார். விஜய் நடித்த நண்பன் திரைப்படம் ரீமேக் என்பதால் அந்த படத்தை தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சேர்க்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

'ஐ' படத்தின் கதை தன்னுடைய மனதில் 15 வருடங்களுக்கு முன்பே தோன்றியது என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் படத்தின் கதையில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தி தற்போது அதற்கு முழு உருவம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top