
சிவகாசி, போக்கிரி, வரலாறு, தசவதாரம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
இவரின் முழு கவனமும் பாலிவுட் மீதே உள்ளது. இந்நிலையில் அசின் வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. மேலும் வரும் 14ம் தேதிக்குள் ரூ.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.