↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கஜேந்திரா, குஸ்தி, திண்டுக்கல் சாரதி, கனகவேல் காக்க உள்பட சில படங்களில் நடித்தவர் புளோரா. இந்தியில் அதிகப்படியான படங்களில் 
நடித்திருக்கும் இவர் தற்போது யா ராப், லட்சுமி போன்ற இந்தி படங்களில் நடிப்பவர், தமிழில் உச்சக்கட்டம், நிஜம் நிழலாகிறது போன்ற படங்களில் நடித்துள்ளர். 

இந்த நிலையில், கோலிவுட்டில் புளோரா சான்ஸ் கேட்டு செல்லும் கம்பெனிகளில், உங்களையெல்லாம் புக் பண்ணினால், மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து செல்ல ஒவ்வொரு முறையும் விமான டிக்கெட், ஸ்டார் ஹோட்டலில் தங்கும செலவு என்று நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. அதனால்தான், நாங்கள் லோக்கலில் உள்ள நடிகைகளையே புக் பண்ணுகிறோம் என்று சொன்னார்களாம். 

விளைவு, தன்னை தமிழ்சினிமா தவிர்ப்பதற்கு இதுதான் காரணமா என்பதை புரிந்து கொண்ட புளோரா, கூடிய சீக்கிரமே சென்னையிலும் தான் தங்குவதற்கு இடம் பார்க்கப்போகிறாராம். இங்கிருந்தபடியே தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பதற்கு முயற்சி எடுக்க திட்டமிட்டுள்ள அவர், முன்பு மாதிரி கறாராக சம்பளம் கேட்கப்போவதும் இல்லையாம். தற்போது தனது மார்க்கெட் சரிந்து கிடப்பதால், பட அதிபர்கள் என்ன கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு நடிக்கப்போகிறாராம். அதோடு, கவர்ச்சி விசயத்தில் ஏற்னவே தாராள மனம் கொண்ட புளோரா, இன்னும் தாராளம் காட்ட தயாராகி விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top