
நடிகர் விஜய் ‘கத்தி’யை அடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சரித்திரகால மற்றும் சமகால பின்னணியுடன் கூடிய பேன்டஸி வகைப்பட்ட இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதுவரை பெயர் வைக்கப்படாததால் இந்த படம் ‘விஜய் 58’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பெயராக ‘மாரீசன்’, ‘புலி’, ‘கருடா’ உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக தேர்வு செய்ய்ப்படும் இப்படத்தின் பெயரை விஜய் தனது ரசிகர்களுக்கு பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்க இருக்கிறார்.
இதற்கிடையே, இப்படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லையாம். எனினும் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உண்மையே.
மேலும், இந்த படம் மூலம் பல காலம் கழித்து தமிழ் திரையுலகுக்கு திரும்பி இருக்கிறார் முதுபெரும் நடிகை ஸ்ரீதேவி. அவருக்கு ஹீரோயின்களைவிட அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.