
'ஐ' திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் சமீபத்தியத்தில் வெளிவந்த டிரைலர் இந்தியத்திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த டிரைலரை பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில், ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா மற்றும் படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில்,இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார்.
அவர் கூறுகையில், "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன். ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.