
கத்தி படம் தயாராகி வெளியாவதற்குள் விஜய் மற்றும் அப்படக்குழுவினர் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்தனர்.
இறுதியில் எப்படியோ அப்படம் வெளியாகி நல்ல
வரவேற்பை
பெற்றிருந்தது.
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருவது நமக்கு தெரியும். இப்படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது.
அதன்பிறகு படத்திற்கு கருடா, போர்வாள் போன்ற பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்திற்கு புலி என்று பெயர் வைக்கப் போவதாக படக்குழுவினரிடம் இருந்து தகவல் வந்துள்ளது. புலி என்பது தான் கதைக்கு பொருத்தமாக இருக்குமாம்.
அதேசமயம் இந்த டைட்டிலை வைத்தால் வேறு மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் படக்குழுவினர் கொஞ்சம் யோசித்து வருகின்றனராம். இப்பெயர் வைக்க விஜய்யும் தயங்குவதாக தகவல்கள் வந்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.