↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய- அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று தேநீர் விருந்து அளித்துள்ளார்.
புத்தாண்டு தினமான இன்று தனது இல்லத்தில் வைத்து இரு அணி வீரர்களுக்கும் பிரதமர் டோனி அபாட் தேநீர் விருந்து அளித்துள்ளார்.
டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டோனி இல்லை, இவர் கலந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி தெளிவான தகவல் ஏதும் இல்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top