↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த 2014ஆம் ஆண்டு கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. கடந்த ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை பெறுவது என்பது சாதாரண காரியமில்லை.2014ஆம் ஆண்டில் ராகினி எம்.எம்.எஸ் படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலம் அடைந்த சன்னிலியோன் வடகறி, ஹேட்ஸ்டோரி, கரண்ட் தீகா போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் பிரதமர் மோடியிடம் சன்னிலியோன் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள தன்னைப்போன்ற என்.ஆர்.ஐ பிரஜைகளுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க சிறப்பு சலுகை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அவரது புத்தாண்டு கோரிக்கை. உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ள பிரதமர் மோடி தன்னுடைய கோரிக்கையை பரிசீலிப்பார் என தாம் நம்புவதாக கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top