ஐ படத்துக்குப் பிறகு எமி ஜாக்சன் ஒப்புக் கொண்ட முதல் படம், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ். இதில் நயன்தாரா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். இரண்டாவதாக எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்தனர்.
மாஸ் படத்துக்காக எமி ஜாக்சனை வைத்து சென்னையில் போட்டோஷுட் நடத்தினர். அதன் பிறகு திடீரென மாஸ் படத்திலிருந்து அவர் விலகினார். அவருக்குப் பதில் ப்ரணிதாவை ஒப்பந்தம் செய்து, தற்போது அவர் நடித்து வருகிறார்.
எமி ஜாக்சன் ஏன் திடீரென்று விலகினார்?
இதுவரை பதில் இல்லாமல் இருந்த கேள்விக்கு எமி ஜாக்சனே விளக்கமளித்துள்ளார்.
"வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. துரதிருஷ்டவமாக அது அமையவில்லை. ஷங்கர் படத்திற்கு பிறகு வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். தற்போது அந்த வாய்ப்பு அமையாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்."
ஆக, எமி ஜாக்சனின் கேரக்டர் அவர் எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் உடையதாக இல்லை. அதனால்தான் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.