பிராட் ஹேடின் கூறியதாவது, டோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜென்டில்மேன்.
டோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர்.
இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் அணித்தலைவராக நீடிக்க முடிந்துள்ளது.
அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைகளைக் கையாண்ட விதம், மற்றும் அவரது அமைதியான அணுகுமுறை ஆகியவற்றால் இந்திய கிரிக்கெட் அணியை தலைமை வகிப்பது என்ற மிகமிகக் கடினமான ஒரு பணியை அவர் செவ்வனே செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.
அவருக்கு எதிராக விளையாடுவது ஒரு பெரிய விஷயம். அவர் கிரிக்கெட் ஆட்டத்தின் உண்மையான ஜென்டில்மேன். அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்ததை விட இந்திய அணியை நல்ல நிலையில் விட்டுச் சென்றுள்ளார் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
கோஹ்லிக்கு என்று பிரத்யேகமாக ஏதாவது உத்திகளை வகுப்பீர்களா என்ற கேள்விக்கு, ஹேடின் சற்றே தவிர்ப்பு மனோபாவத்துடன், நான் கோஹ்லியைப் பற்றி பேச வரவில்லை.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஹேடின் இறங்கும்போது கோஹ்லி சில வார்த்தைகளை அவரை நோக்கி பிரயோகித்தார். டேவிட் வார்னர் கூட அதனை கண்டித்திருந்தார்.
மீண்டும் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விராட் கோஹ்லி களமிறங்கி ஆடிக் கொண்டிருந்த போது பிராட் ஹேடின் உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் கோஹ்லியை நோக்கி “எல்லாம் உன்னைப்பற்றித்தான், எல்லாம் உன்னைப்பற்றித்தான்” என்று கேலி செய்தனர்.
ஏனெனில் அவுஸ்திரேலிய வீரர்கள் எது பேசினாலும் அது தன்னை நோக்கியே என்றவாறு கோஹ்லி எல்லாவற்றுக்கும் பதில் கூறியதே இத்தகைய கேலிப்பேச்சுக்கு வழி வகுத்தது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.