↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஏர் ஏசியா விமான விபத்தில் பலியான விமானியின் மகன், அப்பா எப்போ வருவாங்க என கேட்டு தினமும் அழுது புலம்புவது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏர் ஏசியாவுக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்தனர்.
இதில் பயணம் செய்து பலியான பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் விமானியான கேப்டன் இரியண்டோவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவர்கள் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சிடோர்ஜோ நகரில் வசிக்கின்றனர்.
அவரின் எட்டு வயது மகன் ஆர்யாவோ, தனது தந்தை இன்னும் வேலைக்குச் செல்வதாகவே நினைத்து வருகிறான்.
அப்பா வேலையை விட்டு இன்னும் வரவில்லையா என்று கேட்டு அழுவதாக இரியண்டோவின் சகோதரர் சுடினோ தெரிவித்துள்ளார்.
அப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால், அவனுடைய மனதை காயப்படுத்த வேண்டாமென்று யாரும் செய்திகளை கூட பார்ப்பதில்லை, சிறிது சிறிதாக அவனிடம் விடயத்தை கூற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top