↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கோலிவுட் திரையுலகில் பல பெரிய சாதனைகளை செய்த பிரபலங்கள் கூட தங்கள் வாரிசை அதே திரையுலகில் ஜொலிக்க வைக்க முடியாத நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் சாந்தனு, சிபிராஜ், மனோஜ், பிரசாந்த், என பலரை அடுக்குக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த பட்டியலில் இருந்து சமீபத்தில் வெளியே வந்தவர் சிபிராஜ். 'நாய்கள் ஜாக்கிரதை' ஹிட்டை அடுத்து இவர் தனது கட்டம் நோக்கி காய் நகர்த்துகிறார்.

இக்கட்டான இந்த நிலையில் இருந்து எப்படியாவது மீளவேண்டும் என முடிவு எடுத்துள்ள சாந்தனு பாக்யராஜ், தற்போது மிகவும் நம்பிக்கை வைத்து நடித்து வரும் திரைப்படம் 'வாய்மை'.

இயக்குனர் செந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் சாந்தனு, முக்தாபானு, கவுண்டமணி, பிரித்வி பாண்டியராஜன், ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராம்கி மற்றும் தியாகராஜனும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்த விட்ட இந்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக நேற்று சாந்தனு பாக்யராஜ் மற்றும் கவுண்டமணி நேற்று ரிகார்டிங் தியேட்டருக்கு வந்திருந்தனர். இந்தபடம் பிப்ரவரியில் ரிலீஸாக உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top