↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சோலார் பேனல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சரிதாநாயரை வாலிபர் ஒருவர் கட்டிப்பிடித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஜாமீனில் விடுதலையான இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் நேற்று சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சரிதா நாயர் நீதிமன்றத்துக்கு சென்றார்.
அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். சரிதா நாயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, கிரிமினல் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக வந்த சதீஷ் என்பவர் திடீரென ஓடி வந்து அவரை கட்டிப் பிடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சரிதா நாயருடன் வந்திருந்த வழக்கறிஞர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சதீஷை பிடித்து தள்ளினர். இதையடுத்து பொலிசார் அங்கு வந்து சதீஷை பிடித்தனர். சரிதா நாயர், இதுகுறித்து நீதிமன்றத்தில் புகார் செய்ததையடுத்து, சதீஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top