↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் மிரட்டல் சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மலின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதால் 3 மாதத்திற்கு முன்பு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனால் அவரது பந்து வீச்சை சரிசெய்ய சில மாதங்களாக முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பலன் இல்லை. அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியை விட 40 டிகிரிக்கு மேல் வளைகிறது.
இந்த நிலையில் பெப்ரவரியில் தொடங்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்குள் பந்துவீச்சு குறையை சரிசெய்ய வாய்பில்லை என்பதால் உலகக்கிண்ண பாகிஸ்தான் அணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top