↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாபா, மன்மதன் படங்களுக்குப்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கவுண்டமணி, பல வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் வாய்மை படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், 49 ஓ படத்தில் கதாநாயகனாக ஒரு விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. அந்த வகையில், தனது 75ஆவது வயதில் ஹீரோவாக நடித்திருக்கும் கவுண்டமணி, சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று இந்த படத்தில் காமெடி கலந்து நடித்துள்ளார். முக்கியமாக சமீபகாலமாக விவசாயிகள் படும் துயரங்களை சொல்லும் வகையிலும், விவசாயிகளின் தற்கொலை எதனால் நடக்கிறது என்பது பற்றியும் இந்த படம் சொல்கிறதாம்.
ஆனால், இப்படம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், விஜய் நடித்த கத்தி படமும் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த படத்திலும் விவசாயிகள் பிரச்சனையே முக்கிய கதைக்கரு என்பதால், கவுண்டமணி படத்தின் வேகம் குறைந்தது. காரணம், ஒரே பிரச்சனையை மையமாகக்கொண்ட இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தால் வெற்றி பாதிக்கும் என்பதோடு, இன்றைய தருவாயில் விஜய்யுடன் கவுண்டமணி மோத முடியாது என்பதால், படமாக்குவதில் வேகத்தை குறைத்தவர்கள், போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளையும் கடந்த மாதம்தான் முடித்திருக்கிறார்கள்.
மேலும்., பொங்கலுக்கு புதிய படங்கள் வந்த பிறகு கத்தி படத்தின் கதையை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்பதால், அதன்பிறகு கவுண்டமணியின் 49 ஓ திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top