↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்கு தம்பியாக 'பகவதி' படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஜெய், படிப்படியாக முன்னேறி இப்போது தனி ஹீரோவாக, நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'வடகறி', 'திருமணம் என்னும் நிக்காஹ்' ஆகிய படங்கள் அதிகம் பேசப்படவில்லை என்றாலும், ஓரளவிற்கு வெற்றியாக அமைந்தது.
இப்போது அவர் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணனின் இயக்கத்தில் 'வலியவன்' படத்தில் ஆன்ட்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசரில், ஆக்சன் காட்சிகளில் ஜெய் மிரட்டியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படம், காதலர் தினத்தன்று வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் ஆக்சன் படமாக இருந்தாலும், காதலர் தினத்திலேயே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஜெய், அடம் பிடிக்கிறாராம்.
காதலுக்கு முக்கியத்துவம் தரும் ஜெய்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top