↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் போட்டியான ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசினார் பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங்.
கடந்த 2011 உலகக்கிண்ண தொடரில் ‘தொடர் நாயகன்’ விருது வென்ற யுவராஜ், 2015 உலகக்கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் சேர்க்கப்படவில்லை.
மேலும் ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட இவரை, இந்த ஆண்டு பெங்களூர் அணி கழற்றி விட்டது. சமீபத்தில் பி.சி.சி.ஐ.ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இப்படி பல சோதனைகள் தொடர்ந்து வந்த போதும் மனம் தளராத இவர் ரஞ்சி கிண்ணத் தொடரில் அசத்தி வருகிறார். முன்னதாக அரியானா (130 ஓட்டங்கள்), மகாராஷ்டிரா (136 ஓட்டங்கள்) அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது, சவுராஷ்டிரா அணிக்கு எதிரான லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங், முதல் தர கிரிக்கெட்டில் 23வது சதம் கடந்தார்.
பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 390 ஓட்டங்கள் எடுத்திருந்தது. யுவராஜ் (127), மன்தீப் சிங் (178) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top