↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
 ‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் படம்தான் ‘மாஸ்’. ‘பிரியாணி’க்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், முக்கிய வேடத்தில் ‘சகுனி’ ப்ரணிதாவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை வரும் கோடை விடுமுறையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்யும் நோக்கத்தில் படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு, ட்விட்டரில் ‘மாஸ்’ படத்தின் அப்டேட்டைப் பற்றி தனது ரசிகர் கேட்ட கேள்விக்கு, ‘’மாஸ் படத்தின் அடுத்த அப்டேட் வரும் பொங்கலுக்கு தெரியும்’’ என்று பதில் கூறியுள்ளார்.
அப்படியானால் பொங்கலில் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கோ அல்லது டீசரோ வெளியாகலாம் என்று சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ ஆகிய இரண்டு படங்களுக்குத்தான் போட்டி என்ற நிலையில் சூர்யா படத்தின் டீசரும் வெளியானால் ஏற்படும் பரபரப்பை காண இப்போதே திரையுலகினர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top