↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட் திரையுலகில் என்றும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிகே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கே.பி அவர்களின் மரணம் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி வட இந்திய நடிகர்களையும் மிகவும் பாதித்துள்ளது. இது குறித்து அமீர் கான் கூறுகையில் ‘கே.பாலசந்தர் 23ம் தேதி மறைந்து விட்டார். இந்திய சினிமாவிற்கு ஒரு சோகமான தினம். சினிமாவிற்கு அவரது பங்களிப்பு யாராலும் ஈடுகட்ட முடியாதவை. அவர் ஒரு எளிமையான மனிதர்.
எனது 25 வருட திரையுலக வாழ்வில், கே.பாலசந்தருடன் கழித்த மாலை பொழுது மறக்க முடியாது. அவர் என்னிடன் இயல்பாக பழகிய விதமும், அவருடன் பழகிய நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
கே.பி குறித்து அமீர் கானின் நெகிழ்ச்சி பதிவு! - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top