↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனவரி 26ம் திகதி தாக்குதல் நடத்தப்படும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த 16 அமைச்சர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்திய உளவு அமைப்பான ஐபி மற்றும் அமெரிக்காவின் சிஐஏ ஆகியவை இந்தியாவில் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்புதான் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தான் ராஜஸ்தான் அமைச்சர்கள் 16 பேருக்கு இவ்வாறு மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, இதுகுறித்து உள்ளூர் பொலிசாரும், உளவுத்துறையினரும் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 26ம் திகதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருவதால் எந்த மிரட்டலையும் பாதுகாப்புப் படையினரும், உளவுத்துறையினரும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

மேலும், இது தீவிரவாதிகள் அனுப்பியதா அல்லது யாருடையாவது விஷமனத்தனமான செயலா என்று தெரியாதபோதும், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top