↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இரண்டாம் உலகப் போரின் போது சண்டையில் ஈடுபட்டு, விசாரணைக் கைதியாக பிடிபட்ட முன்னாள் ஒலிம்பிக் வீரர் லூயிஸ் ஸம்பெரினி என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் பரபரப்பாக விற்பனையானது.

இந்த நாவலை மையமாக வைத்து ஹாலிவுட்டின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜோலி, ‘அன்புரோக்கன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் லூயிஸ் ஸம்பெரினியின் கதாபாத்திரத்தில் ஜேக் ஓ கான்னெல் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடும் உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஜனவரி 2-ம் தேதி திரையிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏஞ்சலினா ஜோலி இயக்கிய இரண்டாவது  படம் ‘அன்புரோக்கன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top