↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பேஷியல் என்பது நம் சருமத்தை பொலிவாக மட்டுமின்றி மிருதுவாகவும் வைப்பதற்காகவும் செய்யப்படுவதாகும்.
சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன.
ஆனால் மற்ற மதுபான பேஷியல்களை ஒப்பிடுக்கையில் வோட்கா பேஷியல் சற்று வித்தியாசமானது.
வோட்கா பேஷியல்
இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.
காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.
இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.
முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து.
வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.
இந்த பேஷியலை முடித்துவிட்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளபளப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top