↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பொதுவாக தானிய வகைகள் என்பது நம் உடலை வலுவாக்க உதவும்.
தானியங்களில் உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் மிகவும் உதவுவது கேழ்வரகு. இது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஸ்லிம்மா இருக்கலாம்
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோஅமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிப்பதால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
வலுவான எலும்புகளுக்கு
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோயை குணப்படுத்த
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கல்லீரலில் கொழுப்பை குறைக்க
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்தசோகையை குணப்படுத்த
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
சோர்வுக்கு டாட்டா
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும்.
மேலும் இது கவலை, மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்குவது மட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top