↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது தேவையற்றது என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். மனைவி அமலாபாலோ கோழி பிரியாணி என்றால் ருசித்து சாப்பிடுவார். அவரை சைவத்துக்கு மாறும்படி விஜய் கூறி வந்தார். அவரும் அதற்கு ஓகே சொன்னார் அத்துடன் ஒரு கண்டிஷனும் சொல்லி இருக்கிறார்.இதுபற்றி அமலாபால் கூறும்போது, ‘கிறிஸ்துமஸ் தினத்தில் என் சிறுவயது விளையாட்டுக்கள் மனதில் நிழலாடுகின்றன. 

சகதோழிகளுடன் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று பாட்டுபாடி கிப்ட் வாங்கிய நாட்கள் மறக்க முடியாது. கிறிஸ்துமஸ் என்றதும் எனது அம்மா செய்யும் பிளம் கேக் ஞாபகத்துக்கு வந்துவிடும். அவ்வளவு சுவையாக கேக் செய்வார். கோழி பிரியாணி செய்வதில் என் அம்மா கைதேர்ந்தவர். இது எங்கள் வீட்டில் வருடாந்திர ஸ்பெஷல் ஐட்டம். சைவத்துக்கு மாற முடிவு செய்திருக்கிறேன். ஆனால் அதை கிறிஸ்துமஸுக்காக தள்ளிப்போட்டிருக்கிறேன். அம்மா செய்யும் சிக்கன் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு மறுநாள் முதல் சைவத்துக்கு மாற உள்ளேன். இதுதான் விஜய்க்கு நான் போட்ட கண்டிஷன்' என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top