சினிமாவில் தங்களுக்கு பிடித்த நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர்கள் ரசிகர்கள். அந்த வகையில் ரஜினிக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் கோவையில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் லிங்கா படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்று மருத்துவர்களின் ஆலோசனையை கேட்காமல் படத்தை பார்க்க வந்துள்ளார்.
படம் முடிந்து தியேட்டரில் இருந்த கூட்டம் அனைத்தும் கலைந்ததும், அவர் அப்படியே இருக்கையில் அமர்ந்திருக்கிறார், அருகில் சென்ற பார்த்த பிறகு தான் அவர் இறந்ததே தெரிய வந்துள்ளது. இந்த செய்தி அந்த பகுதி மக்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.