↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல தமிழ் நடிகை நயன்தாரா. இவரது சொந்த ஊர் கேரள மாநிலம். இவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக கொச்சி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். 10.30 மணி விமானத்தில் ஏற 10 மணி அளவில் 5 சூட்கேசுகளுடன் வந்ததாக தெரிகிறது. 

குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் வராததால் சூட்கேசுகளை விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்தனர். அவர்களிடம் நயன்தாரா சமாதானம் கூறியும் சூட்கே சுகளை ஏற்ற அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் அவர் தவித்தப்படி நின்றார். கைப்பையை மட்டும் விமானத்தில் கொண்டு செல்ல ஊழியர்கள் அறிவுறுத்தினர். 

இதையடுத்து எடுத்து வந்திருந்த 5 சூட்கேசுகளையும் காரிலேயே திருப்பி அனுப்பினார். கைப்பையை மட்டும் அவர் விமானத்தில் எடுத்துச் சென்றார். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top