↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இந்த படம் சரியாக போகவில்லை என்றும், இந்த படம்10 படையப்பாவிற்கு சமம் எனக்கூறி, ஏமாற்றி விற்று விட்டதாகவும், இதனால் தாங்கள் கடும் பண நெருக்கடிக்கும், மனவுளைச்சலுக்கும் ஆளாகி தங்களது  வாழ்வாதரத்திற்க்கே என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாக கண்ணீர் மல்கவும், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என ப்ளாக் மெயில் செய்தும் பேட்டிகளை தினம், தினம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது சரியா என சினிமா வட்டாரங்களில் உள்ள பலரையும் விசாரித்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்களை கீழே கொடுத்துள்ளோம்.

தமிழகத்தின் முன்னோடி விநியோகஸ்தர் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது:
ஒரு படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்களுக்கு  பணத்தை திருப்பித்தரும் ஒரு பழக்கத்தை முதன் முதலில் பாபா படத்தின் மூலம் ஏற்படுத்தியவர் ரஜினி. இதில் தொடர்ச்சியாக பல தோல்வியடைந்த படங்களின் விநியோகஸ்தர்கள், அந்தந்த நடிகரை பணத்தை திருப்பி தரும்படி கேட்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எந்தவொரு நடிகரும் பணத்தை திருப்பி கொடுக்க முன்வருவதில்லை, ரஜினி மட்டும் இதிலென்ன விதிவிலக்கு? எனக் கேட்கிறார்.
மேலும், படத்தில் நடித்துள்ளவர்கள் பணம் கொடுக்க வேண்டுமென்றால் ரஜினியுடன் படத்தில் நடித்த அனுஷ்கா, சோனக்சி சின்ஹா, சந்தானம், இசையமைத்த  AR ரகுமான் இவர்கள் அனைவரும் சேர்ந்து தானே கொடுக்க வேண்டும். ரஜினியை மட்டும் கேட்க, ரஜினி என்ன இளிச்சவாயனா? எனக் கேட்கிறார்.

மேலும், இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர்  சங்கத்தில் இருப்பவர்களிடம் பேசிய போது,
லிங்கா படம் தோல்வி என்றும், இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுள்ளது என்பதையும், இப்போது இதை இந்த நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், ரஜினியின் படங்கள் பல நேரங்களில் இரண்டவது, மூன்றாவது வாரத்திற்கு பிறகு ஓடிய சரித்திரம் அனைவருக்கும் தெரியும். இதற்கு சமீபத்திய உதாரணம் சிவாஜி மற்றும் சந்திரமுகி.

மேலும், இந்த படத்தை இந்த விலைக்கு, இந்த ஏரியாவில் வாங்குங்கள் என ரஜினியா கூறினார்? படத்தை வாங்குவதும், அதன் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பேற்பதும் ஒரு விநியோகஸ்தரின் கடைமையேயன்றி படத்தை தயாரித்தவர்களுக்கோ, நடித்தவர்களுக்கோ பொறுப்பு கிடையாது.
எந்தவொரு நடிகரும் தன்னுடைய படம் நன்றாக ஓட வேண்டும், ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படத்தில் நடிக்கின்றனர். சில சமயங்களில் விமர்சகர்களாலும், பொதுமக்களாலும், ரசிகர்களாலும் அந்த படம் ஏற்றுகொள்ளபடவில்லையெனில் நேரடியான இழப்பு நடிகருக்கும் உண்டு. இதனை அவர் எங்கு, எப்படி, யாரிடம் போய் வாங்குவது எனவும் கேட்கின்றனர்.

மேலும், விநியோகஸ்தர்கள் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவது குறித்த கேள்விக்கு, இந்த படத்தை முன்னனுபவம் இல்லாத, சினிமா வியாபாரம் தெரியாத பலரும், ரஜினி என்ற பிம்பத்தை மனதில் வைத்துகொண்டு வியாபாரம் ஆகக்கூடிய விலையை விட கூடுதலாக விலை கொடுத்து 'வேந்தர் மூவீஸ்' நிறுவனத்திடம் தங்கள் சொந்த விருபத்தின் பேரில் இந்த படத்தினை வாங்கியுள்ளனர். இதில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாளர்கள் என்பதையும் தெரிந்தே வாங்கியுள்ளனர். இந்நிலையில், படம் சரியாக ஓடவில்லை  என்றவுடன் கொடுத்த காசை திருப்பி கொடுங்கள் எனக் கெஞ்சுவதும், மிரட்டுவதும் எந்தவிதத்தில் நியாயம்? இது எந்த தொழிலிலும் இல்லாத ஒன்று.
நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் மூலம் ஏற்படுத்திய தவறான முன்னுதாரணம் இன்று அவருக்கே வினையாக நடந்து முடிந்துள்ளது.

வியாபாரத்தில் நொடிந்து போன ஒவ்வொருவரும் பொருளை வாங்கியவரிடம் பணத்தை திருப்பி கேட்கும் சரித்திரம் எந்த தொழிலிலும் இல்லை, இந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதும் உலகில் எங்கும் இல்லாத செயல்.

தொழிலில் சரிவு ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால், உலகில் யாருமே எந்த தொழிலுமே செய்ய முடியாது. இந்த மிரட்டல்களுக்கு ரஜினி அடிபணியமாட்டார் எனவும், இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு எந்தவிதமான் சிக்கல்கள் வந்தாலும் நடிகர்களும், தயாரிப்பளர்களும் உடன் நிற்போம் என ரஜினியிடமே கூறியுள்ளோம். இதனை  தொடர்ந்து லிங்கா படப் பிரச்சனை குறித்து கடும் குழப்பத்தில் இருந்த ரஜினி தற்போது தீர்க்கமான ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும், விநியோகஸ்தர்கள் லாப நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பு, இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.


40 கோடி - ரஜினிக்கு கெடு என வந்த செய்திகள் இதற்கு மேலும் ரஜினியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது, கட்டுப்படவேண்டியதில்லை. ரஜினிக்கு கெடு என்பது தேவையுமில்லை எனக் கூறுகின்றனர். ரஜினியும் இதற்கு உடன்பட்டவாரக இதில் இதற்குமேல் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனகூறி ஒதுங்கிவிட்டதாக கூறியவர்கள், புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top