↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மொனராகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி ஊழல் மோசடி மிக்க ஆட்சியை முன்னெடுத்தார்.
சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத் தன்மையையும் பண்டாரநாயக்க கொள்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த மறந்து செயற்பட்டார்.

அரச ஊழியர்கள் சுயாதீனமான முறையில் கடயைமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்காக எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் நாட்டின் விவசாயிகள் பற்றி எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.

தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக வழ்ககுத் தொடர முடியாது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilwin.net/show-RUmszCRdKafw1.html#sthash.tKRvHA3S.dpuf

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top