இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் புதல்வரான யோசித்த ராஜபக்சேவுக்கு சொந்தமான CSN தொலைக்காட்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த தொலைக்காட்சியின் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அதிகாரத்தை தேசிய ரூபவாஹினிக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ரூபவாஹினியின் புதிய தலைவர் பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கிரிக்கெட் உரிமையை CSN தொலைக்காட்சி பெற்றுக் கொண்டதால் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.