↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அரியானாவில் மத்திய அமைச்சர்கள் சிலர் ரோட்டோர தபாவில் உணவருந்தியுள்ளனர்.
அரியானாவில் பேட்டி பச்சாவோ அந்தோலன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாகவும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹெலிகாப்டரில் டெல்லி திரும்ப அமைச்சர்கள் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் பயணம் கைவிடப்பட்டது.

இதையடுத்து அமைச்சர்கள் கார்களில் டெல்லி கிளம்பினர். ஆனால் வழியில் அமைச்சர்களுக்கு பசி எடுத்ததால், டெல்லிக்கு அருகே நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான முர்தால் தாபாவில் சாப்பிட சென்றுள்ளனர்.

இதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் வியப்புடன் பார்த்தனர். பின்னர் அமைச்சர்கள் ஆர்டர் கொடுத்த ஆலு பரோட்டா, மீத்தி லஸ்ஸி, ஜிலேபி ஆகியவற்றை பரிமாறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top