அஞ்சான் படத்தை அடுத்து லிங்குசாமி இரண்டு அட்டகாசமான திரைக்கதையை தயார் செய்து முடித்துள்ளார். ஒன்றில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், மற்றொன்றில் விஷால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவருமே லிங்குசாமியின் இயக்கத்தில் பையா மற்றும் சண்டக்கோழி ஆகிய சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் அறிமுக நாயகி நடிக்கவுள்ளார். கார்த்தி தற்போது 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கத்தில் "காஷ்மோரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கார்த்தி-லிங்குசாமி காம்பினேஷனில் வெளிவந்த பையா சூப்பர் ஹிட் ஆனதால் இந்த படம் 'பையா 2' படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் விஷாலும் ஆம்பள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் லிங்குசாமி படத்தில் நடிக்க தயாராகிவிடுவார். மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா அல்லது சமந்தா நடிப்பார் என கூறப்படுகிறது. இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் ஆரம்பிப்பது குறித்த தகவல்களை லிங்குசாமி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமி பையா 2, மற்றும் சண்டக்கோழி 2 என அடுத்தடுத்து இரண்டாம் பாக படங்களை இயக்கவிருப்பதால் அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதாகவே கோலிவுட்டில் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.