↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கத்தி' வெற்றிப்படத்தை அடுத்து விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் சரித்திர பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். விஜய் இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இந்த படம் வளர்ந்து வளர்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சந்தித்து ஒன்லைன் கதையை கூறியதாகவும், அந்த கதையில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிம்புதேவன் படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்து அட்லி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார்.

அட்லி படத்திற்கு பின்னர் விஜய், சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சசிகுமார் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் இயக்கி வரும் "தாரை தப்பட்டை" படத்தில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top