↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அருண் ராஜ் வர்மா இயக்கத்தில் ,தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் படம் பிரசாந்தின் ‘சாஹசம்’.

இந்த படத்திற்காக தேசி தேசி தேசி கேர்ள்(Girl) என்ற பாடலை நேற்று சிம்பு பாடியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு நேற்று சென்னை வந்ததும் முதல் வேலையாக இந்த பாடலை பாடி கொடுத்துள்ளார்.

அனிருத் சமீபத்தில்  நா.முத்துகுமார் எழுதிய ’யாரிவள் யாரிவள்’ என்ற பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் ’சாஹசம்’ படத்தில் சங்கர் மகாதேவன். ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங். அரிஜித் சிங், ஆண்ட்ரியா உள்ளிட்ட இந்திய , சர்வதேச பாடகர்கள் பாடியுள்ளனர்.

நேற்று சிம்பு பாடியதோடு 'சாஹசம்' படத்தின் அனைத்து பாடல் பதிவுகளும் நிறைவேறிவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

’சாஹசம்’ படத்தின் இசை விழாவில் அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லட்சுமி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் பாட உள்ளதாகவும் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top