↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லிங்கா படம் தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை எற்படுத்தியுள்ளது. அது குறித்து ரஜினியிடம் மனு தரப் போகிறேnம். அன்றைய தினம் எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  


































லிங்கா வசூல் குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. படம் ஹிட் என்றும், போட்ட பணம் வரவில்லை எனவும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் லிங்காவை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், லிங்கா படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். இதுபற்றி 22 -ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை சந்தித்து மனு தரப்போகிறோம். அன்றைய தினம் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
 
விநியோகஸ்தர்களுடன் திரையரங்கு உரிமையாளர்களும் 22 -ஆம் தேதி ரஜினியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top