↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மூன்று மாதங்களுக்கு முன் ஆந்திராவை தாக்கிய ஹுட் ஹுட் புயல் பல ஆயிரம் கோடிகளுக்கு இழப்பையும், பலநூறு உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது. புயல் நிவாரண நிதியாக பலரும் அள்ளித் தந்தனர். சூர்யா, கார்த்தி, விஷால், ராதிகா, சரத்குமார் என ஏராளமான தமிழ் திரையுலகினரும் நிதி அளித்தனர். ரஜினியும் நிதி அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 
மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் சமீபத்தில் லிங்காவின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெளியீட்டுவிழா ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய ரஜினி, புயல் நிவாரணத்துக்கு தனது பங்கை சென்னை சென்றதும் அளிப்பேன் என்றார்.
 
அதன்படி ஐந்து லட்ச ரூபாயை புயல் நிவாரண நிதியாக ராகவேந்திரா ட்ரஸ்ட் மூலம் ரஜினி அளித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top