
லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் ஆரம்பத்தில் தடுமாறினாலும் வெற்றியின் விளிம்பிற்கு வந்தது.
கடைசி ஓவரில் 2 பந்திற்கு 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், டெல்லி அணியின் கூல்டர் நைல் வீசிய 5வது பந்தை, ஐதராபாத் அணி வீரர் கரண் சர்மா சிக்சருக்கு துாக்கி அடித்தார்.
அப்போது பவுண்டரி எல்லைக்கு அருகிலிருந்த, மயாங்க் அகர்வால் தாவிப்பிடித்து பந்தை சிக்சருக்கு செல்லாமல் தடுத்தார்.
இதனால் ஐதராபாத் அணியால் 20 ஓவர் முடிவில் 163 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மயாங்க் அகர்வாலின் சிறப்பான அந்த களத்தடுப்பு டெல்லி அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது.
|
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.